ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ!
அப்போது நம்முடைய ஸ்ரீமடம் கும்பகோணத்தில் இருந்த ஸமயம் ! ஒருநாள் ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வர பூஜை முடிந்து, தீர்த்த ப்ரஸாதம் குடுத்துவிட்டு, சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் நம் பெரியவா.
“ஸாமீ!….தெய்வமே!…..எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ !…”
திடீரென்று ஒரு குடியானவ பக்தர் அலறிக் கொண்டே பெரியவாளிடம் ஓடிவந்து, பாதங்களில் விழுந்து அழுதார்!
“என்னப்பா?…என்னாச்சு?…..”
“ஸாமீ ! எனக்கு ஒரே ஒரு மவன்….கறியாப்பில [கறிவேப்பிலை] கொத்தாட்டம்! வயல்ல ஸாப்பாடு ஸாப்ட்டுகிட்டு இருந்தான் ஸாமீ! அவனை பாம்பு கடிச்சிருச்சு ஸாமீ !……”
“ஸெரியா சொல்லு…..பாம்பு கடிச்சுதா?…..”
“மயக்கம் போட்டு விளுந்துட்டான் ஸாமீ! பாம்புக் கடிக்கி, மந்திரிக்கிறவங்க யாருமே இங்க இல்லீங்க ஸாமீ! காப்பாத்துங்க தெய்வமே!…”
பெரியவா எதுவும் பேசாமல், அவருடைய கையில் விபூதியைப் போட்டார்.
“பையனோட நெத்தில பூசு…..”
“ஸெரிங்க….”
“வீட்டுல அரப்பு, சீயக்கா பொடி இருக்கா?…”
“இருக்குங்க ஸாமீ !……”
“பையனோட ஒதட்டை பிரிச்சு, அவனோட வாய்ல, அரப்பு பொடியை தடவு! அவன் கசக்கறது-ன்னு துப்பினா….பாம்பு கடிக்கலேன்னு அர்த்தம்; திதிக்கறது-ன்னு சொன்னா….பாம்பு கடிச்சிருக்குன்னு அர்த்தம்; அதுக்கான வைத்யம் பண்ணணும்….”
“கடவுளே! எம்மவன் பொளைப்பானா?…”
“மொதல்ல போய் அரப்பு பொடிய குடு…..”
குடியானவர் ஓடிப்போய், பையனின் வாயில் அரப்புப் பொடியை தடவினார்……
“ஐயே!….கசக்குதுப்பா…..!..”
துப்பினான்!
அப்பாக்காரருக்கு பெரிய நிம்மதி!
“பாம்பு கடிக்கலடா…!….ஸாமீ காப்பாத்திட்டாரு…”
உடனே பையன் நெற்றியில் பெரியவா குடுத்த விபூதியைப் பூசிவிட்டு, அன்று மாலையே, மனைவியையும், மகனையும் பெரியவாளை…
View original post 76 more words
Written by ramakrishnan6002
Leave a comment